My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Monday, July 14, 2008

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

இன்று காலை ஓசை செல்லா அண்ணாவிடமிருந்து வந்த சூடான கடிதம். உங்கள் சிந்தனைக்கு. -வா. தமிழரசி.

”தமிழ் வலைப்பூக்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்ற அவாவில் உருவாக்கப்பட்ட அட்டவணையானது திரட்டியாக மறுவடிவம் பெற்றது என்பது வரலாறு. ஆங்கிலம் போன்று உலகலாவிய மொழியில் ஏன் திரட்டிகள் பிரபலமாகவில்லை என்ற கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். அது இயலாத காரியம். 4000 மெம்பர்கள், ஆயிரம் ஆக்டிவ் மெம்பர்கள் உள்ள தமிழ் பூவுலகுக்கே 10 நிமிடம் மட்டுமே பதிவு தெரிகிறது என்கிற பிரச்சினை நிலவுகையில் 15 மில்லியன் அல்லது ஒன்றரைக்கோடி ஆங்கில வலைப்பூக்களைத் திரட்டினால் பதிவுகள் மைக்ரோ செகண்டுகள் கூட தாங்காது என்ற உண்மையை உணரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது அங்கு சாத்தியமற்ற ஒன்று! அதனாலேயே பிளாக் லைன்ஸ் போன்ற உபயோகிப்பாளர் விருப்பம் சார்ந்த பதிவுகளைத் திரட்டும் சேவையைத் தந்தனர் எனலாம்.

தமிழில் இன்று பல திரட்டிகள் வந்தாலும் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் திரட்டியாக இன்றும் வலம் வருவது தமிழ்மணம் மட்டுமே. காரணம் டெக்னாலஜி என்று நிச்சயம் சொல்லமுடியாது. அவ்வகையில் பார்த்தால் தேன்கூடு இன்னொரு தமிழ் ப்ளாக்லைனாக வரக்கூடிய அளவுக்கு விருப்பம்சார் திரட்டியாக இயங்கவல்ல முறையில் உருவாக்கப்பட்டது. திரு சாகரன் அவர்கள் அகால மறைவுக்குப் பின் அதன் வளர்ச்சி மட்டுப்பட்டு இருந்தாலும் ஒரு சரியான வல்லுனர்குழு பொறுப்பேற்று குழுவாக இயங்கினால் அது இந்தியாவின் நிகரற்ற தேசி திரட்டியாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்து தமிழ்வெளியைச் சொல்லவேண்டும். தமிழ்மணத்தின் ஆரம்ப ஆதரவோடு வந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அதை நிர்வகிப்பவர் ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப இணைய மென்பொருளாளர் என்ற முறையில் அதன் புதுமைகள் புகுத்தப்படும் தன்மை, வளர்ச்சி போன்றவைகள் எதிர்காலத்தில் நிச்சயம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இத்திரட்டியில் நம் பின்னூட்டங்களும், பதிவுகளும் நம் பூவில் எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையில்லாத அளவில் மிகவிரைவாக திரட்டப்படுவதும் இன்றும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் தமிழ்கணிமை, திரட்டி, தமிழ்பதிவுகள் போன்றவைகளும் வரத்துவங்கியுள்ள நிலையில் தமிழ்மணம் இன்னும் கோலோச்சுவதன் காரணம் என்ன என்று பார்த்தோமானால் அவர்கள் முன்னோடிகள் என்ற தகுதியை உடையவர்கள். மேலும் தேன்கூடு தவிர்த்து அனைத்து திரட்டிகளும் இவர்கள் செய்யும் அதேவேலையையே செய்கிறார்கள் என்ற காரணத்தால் வாசகர்கள் ஆதரவு தமிழ்மணத்தையே நம்பர் ஒன் திரட்டியாக முதலாமிடத்தில் வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு அபாயமும் அபத்தமும் காத்திருக்கிறது எனலாம்.

சமீபகாலமாக அதன் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது கவனிக்கத்தக்கது. தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி, அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற பதிவர்களின் மாற்று எழுத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மழலையர் திரட்டி போல “குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்றெல்லாம் சொத்தைவாதங்களை வைத்துக்கொண்டு பலரும் கூப்பாடு போடும் வேளையில் படைப்பாளியை சிறுதும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கும் மேட்டிமைத்தனம் சுகுணா திவாகர் போன்ற ஒரு சில படைப்பாளிகளை எவ்வளவு எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

பொதுவாகவே இணையம் என்ற ஊடகத்தில் காமக்கதைகள் படிக்க தமிழ்மணம் வருவார்கள் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். அதே வார்த்தைகளை கூகிளில் அடித்தால் மிகமிக அழகான அல்லது அருவருப்பான காமக்கதைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை பதின்ம வயது இணையம் மேயும் பாலகர்கள் கூட அறிவார்கள். இங்கியங்கும் பதிவர்களுக்கே கூட பாலியல் அறிவு, பாலியல் அழகு, பாலியல்/ஒழுக்கவியல் அதிர்ச்சி போன்றவற்றை படிக்க நல்ல ஒரு வாய்ப்பு என்ற வகையிலேயே ஜ்யோவ்ராமின் பதிவுகள் மிக நல்ல வரவேற்பை பெற்றன எனலாம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அவரின் வரிகளுக்கு நட்சத்திரமிட்டு என்ன சாதித்தார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. **** கதைகள் என்றால் அனைவருக்கும் இனி புரியத்தானே போகிறது போங்கள். இம்மாதிரி விசயங்களை தான் எழுதும் எழுத்துக்கு சிந்தனைக்கு முழுப்பொறுப்பு எடுத்து எழுதும் முகமுள்ள சுகுணாக்களுக்கும், தமிழச்சிகளுக்கும், ஓசை செல்லாக்களுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்களுக்கும் ஒரு சின்ன முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் ஏதோ அனானி ஆட்டக்காரர்கள் மாதிரி நடத்தும் இவர்கள் மனப்பான்மை நிச்சயம் மாறவேண்டும். ஒரு தமிழ்மணம் போல் இன்னொரு தேன்கூடு வரலாம், திரட்டலாம், ஆனால் ஒரு சுகுணாவையோ, செல்லாவையோ, வளர்மதியையோ பிரதியெடுப்பது சாத்தியமா என்பதை மரியாதையின்றி மட்டுறித்தி.. முன்னெச்சரிக்கை.. சீ எழுதவே அசிங்கமாக இருக்கிறது.. முன் தகவல் இன்றி இந்த படைப்பாளிகளை அலட்சியப்படுத்த நினைக்கும் தமிழ்மணப் படிப்பாளிகள் உணரவேண்டும்.

சுயசிந்தனை, தன்மானம், தமிழார்வம் உள்ள பதிவர்கள் இந்த மாதிரியான மேட்டிமைத்தன்மை வாய்ந்த ஒரே ஒரு திரட்டியை இனியும் வளர்ப்பது என்பது ஒரு மோனோபொலி பிற்போக்கு செயாலாகவே முடியும் என்பதை ”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம். எனவே பதிவர்களும் வாசகர்களும் தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளையும் ஆதரிக்கவேண்டிய சூழலை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பதிவரும் தங்கள் வலைப்பூவில் தமிழ்மணத்தோடு, தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்க்கணிமை, தமிழ்ப்பதிவுகள், திரட்டி என்ற பல திரட்டிகளுக்கும் தொடுப்புக்கொடுப்பதோடின்றி மற்ற திரட்டிகளையும் தினமும் ஒரு முறையாவது பார்வையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த திரட்டிகளுக்கும் சில நூறு ஹிட்கள் வரும்பொழுது அவர்களும் புதிய யுத்திகளை புகுத்த முயல்வார்கள். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜிக்கு/புதுக்கண்டுபிடிப்புகளுக்கு எப்படி சுமையாகிப் போனதோ அதேபோல தமிழ் இணைய வலைப்பூ ஊடகத்திற்கு தமிழ்மணம் சுமையாக வாய்ப்புள்ளது. இப்படிச் செய்தால் ஒரு மோனோபொலி அல்லது தனித்திரட்டி சர்வாதிகாரம் இனிமேலும் வளர வாய்ப்பில்லாமல் தமிழ் மாற்றுச் சிந்தனைகளும் எழுத்துக்களும் வாழ்வாங்கு வாழும் என்று கூறி எனது இந்த முழுநீள கட்டுரையை பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வெல்க தமிழர்களின் மாற்றுச்சிந்தனைத்தளம். வாழ்க இணையத்தமிழ் சூழல்.

அன்புடன்
ஓசை செல்லா

(நூறு பேருக்கு மேல் பார்த்தும் யாரும் மறுமொழியிடவில்லை! அவ்வளவு பயமா இணிஅய்த்தில் எழுத. சரி போங்கள். அனானியாகவாவது சொல்லிவிட்டுப்போக ஏதுவாக அனானி ஆப்சன் ஆன் செய்யப்பட்டுள்ளது)

70 comments:

said...

தோழர்!

நான் தைரியமாக பின்னூட்டுகிறேன் தோழர். :-)

Anonymous said...

//(நூறு பேருக்கு மேல் பார்த்தும் யாரும் மறுமொழியிடவில்லை! அவ்வளவு பயமா இணிஅய்த்தில் எழுத. சரி போங்கள். அனானியாகவாவது சொல்லிவிட்டுப்போக ஏதுவாக அனானி ஆப்சன் ஆன் செய்யப்பட்டுள்ளது)//

என்ன செய்வது தமிழரசி/செல்லா?

வல்லான் வகுத்ததே சட்டம் என்று இருக்கையில் மொக்கை தான் சேஃபான வழி என்று போய்க்கொண்டிருக்கிறோம். நீங்கள் சொன்ன கருத்துக்களும் தீர்வுகளும் நிச்சயம் சிந்திக்க வைக்கின்றன. நன்றி

Anonymous said...

ஒரு சில பெயரிலிகளால் பலநூறு முகமிலிகள் உருவாக்கப்படுகிறார்கள். சூப்பர் கட்டுரை செல்லா. நீங்கள்லாம் இல்லாமல் இது ஆமாஞ்சாமி கூட்டங்கள் பண்ணாங்குழி விளையாடும் மொக்கை தளமாகிவிட்டது. பதிவுலகத்திற்குத்தான் திரட்டியே தவிர திரட்டிக்கென பதிவர்கள் எழுதுவது என்பது சாபக்கேடு. சரியான சவுக்கடி கட்டுரை. தீர்வுகளும் அருமை.

Anonymous said...

நானும் இரண்டு திரட்டிகளுக்கு இணைப்பு கொடுத்துவிட்டேன். இரண்டு திரட்டிகளையும் பார்த்தும் விட்டேன். ஆனால் இதுவரை இவற்றையெல்லாம் செய்ததில்லை. இனிமேல் அவசியம் செய்யவேண்டும். நன்றி செல்லா.

ஒரு குமுறிக்கொண்டிருந்த பதிவர்

said...

சில மாதங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தமிழ்மணத்தை விமர்சித்து சில தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஓசை செல்லா ஒரு தனிப்பதிவு போட்டு அதற்கு இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்: "தம்பீ, இதைச் சொல்லுவதற்குக் கூட உனக்கு தமிழ்மணம்தான் தேவைப்படுகிறது" என்று. Now the clock has turned a full circle என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

Monopolyஇனால் வரக்கூடிய அபாயம் போன்றவைகளில் செல்லாவோடு உடன்படுகிறேன். மற்ற தளங்கள் கணிசமான அளவில் வருகையாளர்களைப் பெற வேண்டுமென்றால் அவை specialize செய்வதன் மூலமே அவர்களைப் பெற முடியும். இருக்கும் 4000 பதிவர்களை எல்லா திரட்டிகளும் திரட்டுவதை விட, சிறு குழு அடையாளங்களின் அடிப்படையில் (உ-ம், பெண்கள், ஈழம், புதுவை, NRI, தமிங்கிலம், etc.) பதிவுகளை பிரித்துக் கொண்டாலோ, அல்லது ஆர்வத்துறை அடிப்படையிலான திரட்டிகள் (உ-ம், பிந, தொழில்நுட்பம், சமூக நீதி, வலது, இடது, etc) போன்றவை வந்தாலோ இந்த 4000 பதிவுகள் ஓரளவு சரிசமமான அளவில் நான்கு திரட்டிகளாலும் பங்கிடப்படும். இல்லாவிட்டால், வெளியிட்ட பதினைந்தாவது நிமிடத்திலேயே ஒரு பதிவு முகப்பை விட்டு வெளியேறி விடும் சாத்தியம்தான் எல்லாத் திரட்டிகளிலும் நிகழும்.

பதிவர்கள் வெளியேற்றம் அல்லது அவர்கள் மீதான கட்டுப்பாடு என்பதை வைத்துக் கொண்டு தமிழ்மணத்தின் மீது பாயாமல் (all said and done, I have a say on what goes on in my real estate, and so does everyone - simple logic), இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளட்டுமே மற்ற திரட்டிகள்? சில வகையான எழுத்துகளிலிருந்து தமிழ்மணம் தன்னை விலக்கிக் கொள்கிறபடியால், அந்தத் தேவையை / காலியிடத்தை மற்றவர்கள் வந்து பூர்த்தி செய்யட்டுமே?

said...

தமிழ்மணம் செய்வதில் பெரிய தவறொன்றும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

தலைப்பை கொஞ்சம் டீஜண்ட்டா வக்கச் சொல்றாங்க. அது தேவைன்னே தோணுது.
ஒரு 'நல்ல' திரட்டியாக செயல்பட சில வழிமுறைகள் இருப்பது அவசியம்.

தொறந்து விட்டா, கொஞ்ச நாள்ள கும்மிக்கு நடுவில் நல்ல பதிவுகள் தேடரது கஷ்டமாயிடும் ;)

ஆனா, அதுக்காக, காமம் எல்லாம் தடையணுமான்னு கேட்டா, கூடாதுன்னுதான் சொல்லுவேன்.

ஜட்டி மாதிரி கப்பு மேட்டர் - தடையலாம் ;) ( லக்கி, ஐ ஆம், சாரி :) )

said...

செல்லா, long time no see?

Anonymous said...

முட்டாள்தனமாக இருக்கிறது இக்கட்டுரை.
நீங்கள் 'புண்'நவீனத்துவமும் காமக்கதைகளும் எழுத வேண்டுமானால் தனி ஒரு பதிவில் எழுது தமிழ் மணத்தில் இணைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?
யார் அந்த 'படைப்புரிமையை' தடுத்தார்கள்?

உங்கள் மன வாந்தியெல்லாம் தமிழ்மணம் என்னும் பொது இடத்தில் எடுக்கக் கூடாது என்கிறது தமிழ்மணம்.
அது சில ஆர்வலர்களால் ஒரு கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்கள் எழுத்துக்களை தட்டியில் வைக்கிறது.

தட்டி வைப்பவன் சில நெறிமுறைகள் சொலகிறான்,அது எனக்குப் பிடிக்கவில்லை என்றால்,நீ பணம் செலவு செய்து உனக்கென ஒரு தட்டி வைத்துக்கொள்.

அதை விடுத்து,உன் தட்டியில்தான் வைப்பேன்,ஆனால் எந்த விதிமுறைக்குள்ளும் வரமாட்டேன் என்றால்,அனுமதிப்பதேயே யோசிக்க வேண்டியதுதான்.அதைத்தான் தமிழ்மணம் செய்தது.

வாசகன்

Anonymous said...

//Voice on Wings said...

சில மாதங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தமிழ்மணத்தை விமர்சித்து சில தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஓசை செல்லா ஒரு தனிப்பதிவு போட்டு அதற்கு இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்: "தம்பீ, இதைச் சொல்லுவதற்குக் கூட உனக்கு தமிழ்மணம்தான் தேவைப்படுகிறது" என்று. Now the clock has turned a full circle என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
//

உண்மைதான். ரவிசங்கர் விசயத்தில் நான் அன்று அவ்வாறு சொன்னது உண்மைதான். காரணம் அது வேறுவகையான சூழல். தமிழ்மணத்தையே தாக்கி எழுதக்கூட தமிழ்மணம் அனுமதித்த சூழல். இன்று பெயரிலியைத் தாக்கினால் தமிழ்மணம் தூக்கிவிடும் என்பது போன்ற சூழல்! வித்தியாசம் புரிந்திருக்கும் தானே நண்பரே.


அன்புடன்
ஓசை செல்லா

said...

இதுல ஒரு பெரிய சர்வே மேட்டர் இருக்கு.

மக்களையே கேட்டுருவோம், கொஞ்ச நாள்ள எடுத்து விடறேன் ;)

Anonymous said...

//பதிவர்கள் வெளியேற்றம் அல்லது அவர்கள் மீதான கட்டுப்பாடு என்பதை வைத்துக் கொண்டு தமிழ்மணத்தின் மீது பாயாமல் (all said and done, I have a say on what goes on in my real estate, and so does everyone - simple logic), இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளட்டுமே மற்ற திரட்டிகள்? சில வகையான எழுத்துகளிலிருந்து தமிழ்மணம் தன்னை விலக்கிக் கொள்கிறபடியால், அந்தத் தேவையை / காலியிடத்தை மற்றவர்கள் வந்து பூர்த்தி செய்யட்டுமே?//

ஒரு மண்ணும் தேவையில்லை நண்பரே. இன்றையபொழுதில் நாம் பழக்கத்திற்கு அடிமை! அவ்வளவே! அவர்கள் விலகினாலும் விலக்கினாலும் வலைப்பூவுலகம் சீரோடும் சிறப்போடும் இயங்கவேண்டும். Technology can be replicated but creativity? So this article is about the creative Freedom of aunthentic authors and to ask ppl to change their aggrigator usage pattern.

Osai Chella

Anonymous said...

//உங்கள் மன வாந்தியெல்லாம் தமிழ்மணம் என்னும் பொது இடத்தில் எடுக்கக் கூடாது என்கிறது தமிழ்மணம்.
அது சில ஆர்வலர்களால் ஒரு கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்கள் எழுத்துக்களை தட்டியில் வைக்கிறது.

தட்டி வைப்பவன் சில நெறிமுறைகள் சொலகிறான்,அது எனக்குப் பிடிக்கவில்லை என்றால்,நீ பணம் செலவு செய்து உனக்கென ஒரு தட்டி வைத்துக்கொள்.

அதை விடுத்து,உன் தட்டியில்தான் வைப்பேன்,ஆனால் எந்த விதிமுறைக்குள்ளும் வரமாட்டேன் என்றால்,அனுமதிப்பதேயே யோசிக்க வேண்டியதுதான்.அதைத்தான் தமிழ்மணம் செய்தது.

வாசகன்//

வாசகரே முதலில் நன்றாக படித்து உட்கருத்து அறிந்து எழுதுங்கள். முதலில் வந்தது வலைப்பூக்கள். பின்பு வந்தது தட்டிகள். அதில் ஒரு தட்டியையே பார்ப்பதால் அந்தத்தட்டி கொஞ்சம் அதட்டி பார்க்கிறது. நாங்கள் தட்டியை நோகவில்லை. மற்ற தட்டிகளையும் பார்க்கவே சொன்னோம். மற்றபடி தட்டிக்காக போஸ்டர்கள் அடிக்கும் புத்தி உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு போஸ்டர்களுக்குத் தான் தட்டி தேடி அலைகிறோம்!

அன்புடன்..
ஓசை செல்லா

said...

//So this article is about the creative Freedom of aunthentic authors and to ask ppl to change their aggrigator usage pattern.//

To give you an analogy - there are crowded restaurants and there are empty restaurants. Unless there is a compelling reason, the crowd will continue to go to the crowded restaurant. Show some differentiation and people will start coming to your sites (or those you're pointing to). Yahooவிலிருந்து Googleக்கு ஏன் மாறினார்கள் மக்கள்? வசியப்படுத்தும் காரணங்கள் (search speed, accuracy, etc.) இருந்ததால் மாறினார்கள். ஒரு பயனராக, அத்தகைய வசியப்படுத்தும் காரணங்களை இதர தமிழ் திரட்டிகளில் நான் இதுவரை உணரவில்லை என்பதுதான் எனது நேர்மையான கருத்து.

Anonymous said...

//ஒரு பயனராக, அத்தகைய வசியப்படுத்தும் காரணங்களை இதர தமிழ் திரட்டிகளில் நான் இதுவரை உணரவில்லை என்பதுதான் எனது நேர்மையான கருத்து.//

பயனராக சரிதான். ஒரு எழுத்தாளனாக, படைப்பாளியாக, சமூகப் போராளியாக எனக்கு ஒரு திரட்டியைவிட பலதிரட்டிகள் இருப்பதே நலம் என்று இப்பொழுது அனுபவத்தால் உணர்கிறேன்.

அன்புடன்
ஓசை செல்லா

Anonymous said...

//உங்கள் மன வாந்தியெல்லாம் தமிழ்மணம் என்னும் பொது இடத்தில் எடுக்கக் கூடாது என்கிறது தமிழ்மணம்.
அது சில ஆர்வலர்களால் ஒரு கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்கள் எழுத்துக்களை தட்டியில் வைக்கிறது.//

மனவாந்தி பிராந்தி அப்படியெல்லாம் பேசக்கூடாது கண்ணா. இங்கன இருக்கறவுங்க மண்டைல மசாலாவும் அங்கன குசாலாவும் சிந்திக்கறா ஆளுக!

அன்புடன்
ஓசை செல்லா

Anonymous said...

பத்தவச்சிட்டியே பரட்டை.சாரி, செல்லா! செல்லா வந்தா பத்தி எரியணுமே.

நல்லது நடந்தா என் அப்பன் முருகப்பெருமானுக்கு மொட்டையடிச்சுக்கிறேன்.

Anonymous said...

நாங்க இப்பொழுது தமிழ்கணிமைக்கு மாறிட்டோம்!

said...

//பயனராக சரிதான். ஒரு எழுத்தாளனாக, படைப்பாளியாக, சமூகப் போராளியாக எனக்கு ஒரு திரட்டியைவிட பலதிரட்டிகள் இருப்பதே நலம் என்று இப்பொழுது அனுபவத்தால் உணர்கிறேன்.//

Self-proclamationதான் இப்போதைய பாணி போலயிருக்கு.

Ok, here goes: ஒரு பயனராக மட்டுமல்லாமல், ஒரு எழுத்தாளனாக, படைப்பாளியாக, மற்றும் சமூகப் போராளியாகவும்தான் எனது கருத்தைப் பதிந்திருக்கிறேன்.

(நீங்களும் நீங்கள் பதிவில் அடையாளப்படுத்திய gang of fourஉம் என்ன சமூகப் புரட்டு புரட்டினீங்களோ, அதே புரட்டலை நானும் கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வந்திருக்கிறேன் என்பதால் இந்த சுயப் பிரகடனம். இல்ல, வேற சிற்றிதழ் பின்புலமெல்லாம் இருக்கணுமா? புரட்டல்வாதின்னு சொல்லிக்கிறதுக்கு?)

said...

நீங்கள் பேசிய இந்த வாதத்தைதான் பதிவாக எழுத எண்ணியிருந்தேன்.. என் தரங்கெட்ட மூளை வேறெதையோ எழுதி, என்னை நானே நொந்து கொண்டேன்!

செல்லா... உங்கள் இந்த வாதம் முழுக்க நியாயமானது. நான் நட்சத்திரக் கதை என்று முதலிலேயே யூகித்துவைத்திருந்த கதைகளை ****கதைகள் என்று வெளியிட பாலாவை கூப்பிட்டு “எதுனா பிரச்னை பண்ணுவாங்களா?” என்று கேட்க அவர் சொன்னார்.. ”போடுங்க.. எதிர்த்தா எதிர்ப்போம்” என்றார். கேட்ட பிறகு எனக்கே என்னை நினைத்து கேவலமாக இருந்தது!


நீங்கள் சொல்வது போல போஸ்டருக்கு தட்டி தேடும் நமக்கு இதெல்லாம் ஜீரணிக்க இயலாத விஷயம்தான்!!

Anonymous said...

//Ok, here goes: ஒரு பயனராக மட்டுமல்லாமல், ஒரு எழுத்தாளனாக, படைப்பாளியாக, மற்றும் சமூகப் போராளியாகவும்தான் எனது கருத்தைப் பதிந்திருக்கிறேன்.//
ஓஹோ அதெல்லாம் என்னன்னு தெரியுங்களா? சும்மா டைப்புற வேளையெல்லாம் இங்க செல்லா'து! வாய்ஸ் ஆன் விங்ஸ் சமூகப்போராளியோட முகத்தை கொஞ்சம் காமிங்க பாப்போம்!


அன்புடன்
ஓசை செல்லா

Anonymous said...

//முதலில் வந்தது வலைப்பூக்கள். பின்பு வந்தது தட்டிகள். அதில் ஒரு தட்டியையே பார்ப்பதால் அந்தத்தட்டி கொஞ்சம் அதட்டி பார்க்கிறது. நாங்கள் தட்டியை நோகவில்லை. மற்ற தட்டிகளையும் பார்க்கவே சொன்னோம். மற்றபடி தட்டிக்காக போஸ்டர்கள் அடிக்கும் புத்தி உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு போஸ்டர்களுக்குத் தான் தட்டி தேடி அலைகிறோம்!

அன்புடன்..
ஓசை செல்லா//

சூப்பரபு. செல்லாவின் நச் வரிகளை ரொம்பத்தான் மிஸ் பண்ணியாகிவிட்டது. நல்லதோ கெட்டதோ மாற்றுப்பார்வையை வரவேற்கவேண்டும். மேலும் படைப்பாளிகளின் அருமையை, உள்ளக்கிடங்கை வெலியிட்ட விதம் அருமை. மேலும் இதில் தாங்கள் தமிழ்மணத்தை கண்டனம் செய்யவோ பகிஷ்கரிக்கவோ சொல்லவேயில்லை என்ற விடயத்தையும் நோக்குகிறேன். அருமையான சிந்தனைகள் மற்றும் உதாரணங்கள். மைக்ரோ சாஃப்ட் மற்றும் போஸ்டர்கள், தட்டிகள். அருமை. நிறைய எழுதுங்கள் தோழரே.

பெயர் வெளியிட சிறிது சிக்கல்
(மின்னஞ்சலில் மேல்விபரம்)

Anonymous said...

தமிழ்மணத்திருந்து விலக்கப்பட்ட விலகிய பதிவர்கள் இப்படி proxy மூலம் பதிவுகள் இடுவதும் நல்ல யோசனைதான் ;)

said...

Who is this Osai Chella?

said...

/இன்று பெயரிலியைத் தாக்கினால் தமிழ்மணம் தூக்கிவிடும் என்பது போன்ற சூழல்/

ஒசை செல்லா

உங்களின் விதண்டாவாதமான பேச்சுகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்துவந்தேன். ஆனால், தொடர்ந்தும் நீங்கள் விடயங்களைத் திரிக்கும்போது, பதிவர்களிடம் என்னைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்றீர்கள்.

தமிழ்மணத்தின் செயற்பாடுகள் பற்றி நான் / தமிழ்மணம் நிர்வாகிகள் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், தேர்தெடுத்துத் தாக்கும் உங்களைப் போன்ற சிலரின் செயற்பாடுகள் உங்களைப் பண்புகளைத் தெளிவாகத் தெரியவைக்கின்றன. அப்படியான மற்றவர்களைப் பற்றி ஏதும் சொல்லவரவில்லை. ஆனால், நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் அறிந்தே பொய்யாகவும் ஆங்காங்கே பதித்து வருவது முறையல்ல.

1. -/பெயரிலி.யுடனான தனிப்பட்ட பிரச்சனைக்காகவே பதிவர்களை விலக்குவதாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்படியேதும் நடக்கவில்லை. தமிழச்சி பதிவு அப்படியாகத்தான் நீக்கப்பட்டது என்றால், நீங்கள் தமிழ்மணம் செயற்பாட்டுக்குழுவினுள்ளே பேசப்பட்ட அனைத்தினையும் உங்களைப்போன்ற omsbudman இனிடம் கொடுத்து வாசித்துப்பாருங்கள் என்று விடவேண்டியதுதான். ஒவ்வொருவரும் தன் இயல்பினை வைத்தே மற்றவர்களின் இயல்புகளையும் எடைபோடுதலைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

2. தமிழ்மணத்திலே என் பங்கு ஓர் எள்ளுப்பூ அளவிலே மட்டுமே. சேர்த்தல்/விலத்துதல் இவற்றிலே தமிழ்மணம் குழுநிர்வாகத்தின் இவ்வாண்டு துணைப்பேராசிரியராக ஒரு வேலையிலே புதிய இடத்திலே புகுந்தபின்னால், தமிழ்மணத்திலே சேர்கின்றவர்களின் பட்டியலைக்கூட நான் கண்டதில்லை. புதியவேலையின் கற்பிப்பு/ஆய்வு அழுத்தம் பகலிலேயென்றால், மாலையிலே வீட்டுக்குவந்து சமைத்து மகனின் தேவையைக் கவனித்துத் தூங்க வைத்துப் பின் அடுத்த நாள் வேலைக்கான ஆயத்தங்களிலே இறங்கவே நேரம் போய்விடுகிறது. மனைவி வேறிடத்திலே கல்வியின் காரணமாக வாழ்ந்து கொண்டிருப்பதாலும், போஸ்ரர் ஒட்டிப் பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டி/கட்டாமற் செய்யும் புரட்சித்திருமணம் என்று அறிக்கை விட முடியாதெனினும், அதைவிட மிகவும் அழுத்தமான நிலையிலே தனிப்பட்ட வாழ்க்கையை நாம் தீர்மானித்துக்கொண்டிருப்பதாலே, மகனை நான் மட்டுமே பார்த்துக்கொண்டாலே உண்டு. இந்நிலையிலே, மனைவி, அம்மா, ஹோட்டல் சமைத்துப்போட, வந்திருந்து பெண்ணியம், பின்நவீனத்துவம், பழப்புளி, கொடுக்காப்புளி தட்டச்சிடும் நிலையோ, தமிழ்மணத்திலே என் இஷ்டப்படி சேர்க்க-விலக்க, விளக்கம் கொடுக்க நிலையோ இவ்வாண்டிலே என்னிடமில்லை. இத்தனை என்னைத் திட்டும் நீங்களோ எப்பதிவரோ, தொழில்நுட்பரீதியிலே தமிழ்மணத்தினை மேம்படுத்தும் தமிழ்மணம் நண்பர்களை அடையாளம் கண்டு தனிப்படப் பாராட்டியிருந்தால் மேலாகவிருக்கும். உங்களுக்குத் தமிழ்மணத்தினைத் தாக்க ஒரு வசதியான அடையாளமாக நான் பயன்படுகின்றேன் என்றால், எழுதும் மொழி புரிந்துகொள்ள முடியாத ஈழத்துத்தட்டுக்கழுவி என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினையேனும் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்திருக்கின்றீர்களா? மற்றைய திரட்டிகளுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றீர்களே? தமிழ்மணத்திலேயிருப்பதானால், தமிழ்மணத்துக்கும் கொடுங்கள் என்று தமிழ்மணம் எப்போதாவது அடவடித்தனமேனும் பண்ணியேனுமிருக்கின்றதா? குறைந்த பட்சம் சேர்ந்திருக்கும் ஒரு திரட்டி, தாம் எடுத்த விதத்திலெல்லாம் எண்ணியபடி விமர்சிக்கப் பொறுத்திருக்கும் திரட்டி என்ற அளவிலேகூட தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கொடுக்கமுடியாத பதிவர்களெல்லாம் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் கொண்ட வலைவீரர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது சிரிக்கவும் முடியவில்லை; வருந்தவும் முடியவில்லை. தமிழ்மணத்துக்கு இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? தமிழ்மணத்திலிருக்கும் என்னைப் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையிலே விழுந்து பிராண்டாதவரையிலே சரிதான் என்றுதான் படுகின்றது

3. செல்லா, நீங்கள் எவ்வளவு பொய்யான முகம் கொண்டவர் என்று இவர்களுக்குத் தெரியவேண்டாமா? இவை தமிழ்மணம் திரட்டியிலேயிருப்பவன் என்றவளவிலே நான் பேசக்கூடாதது. இத்தனை நாளும் தமிழ்மணத்திலே இருக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் செய்வதுபோலவே, எத்தனை தாக்குதல் என் மீது நிகழ்ந்தாலும், தனிப்பட்ட அளவிலே மட்டுமே பதிலளித்து வந்திருக்கின்றேன். போலி சல்மா விவகாரம், விடாது கருப்பு விவகாரம் எல்லாவற்றிலுமே தமிழ்மணம் அப்படியான விவரங்களை விடாமலே பதிலளித்ததாலேதான், அழுத்தப்பட்டது. ஆனால், உங்கள் உருவாக்கங்கள் வெட்கத்துக்குரியன. அவற்றினை நீங்கள் தமிழ்மணம் என்று சுட்டும் அளவிலே அதை வைத்துத்தான் சொல்லவேண்டும்.

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள். அது பற்றி எனக்கேதும் கிஞ்சித்தும் வருத்தமில்லை. ஏனென்றால், விலக்கவேண்டிய பதிவு என்றால், தமிழ்மணத்தின் முடிவே என் முடிவும். தமிழச்சியின் ஒரு பதிவு பற்றிய என் நிலைப்பாடு என்னவாகவிருந்தது என்பது பற்றித் தமிழ்மணத்தின் மற்றைய உறுப்பினர்கள் விளக்கம் தந்ததைக்கூட மண்டையிலே போட்டுக்கொள்ளும் நிதானம் உங்களிடமோ உங்கள் தோழர்களிடமோ இல்லை)

ஆ. தடாலென, உங்கள் முன்னைய திரட்டி ஒன்றுக்குப் பெண்வாசம் சேர்த்துவிட்டீர்கள்.

இ. பிறகு, பதிவிடாமலே காணமலே போனீர்கள்

ஈ. "தமிழ்சசி, சங்கருடன் மட்டுமல்ல பெயரிலியுடனும் தொடர்பு கொள்வேன்" என்று அறிக்கை விட்டது மிக அண்மையிலேதான்

உ. தமிழ்மணத்தின் ஓர் உறுப்பினருடன் தனிப்படப் பேசி, தமிழ்மணத்திலே நீங்கள் இணைவது பற்றிக் கதைத்தது (let me put it gracefully in that way) அதன் பிறகு.

ஊ. இப்போது திரும்ப -/பெயரிலி.யோடு தனிப்பட மரத்திலேறியிருக்கின்றீர்கள்.

ஆக, உங்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கும் பகிரங்கச்செயற்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இப்போது தமிழ்மணத்திலே சேர்த்துக்கொண்டால், செல்லாவுக்கான வெற்றிப்பரணி உங்கள் தோழர்களாலே இசைக்கப்படும். தமிழ்மணத்துக்கும் அதன் "வெறுமனே தாக்/ங்குகுறியான" எனக்கும் பக்கவாட்டிலே ஓர் உதை விழும்.

4. இந்தக்குழந்தைப்பிள்ளைத்திரட்டி~காமக்கதைத்திரட்டி பற்றியும் விரிவாக, உங்களைப் போன்றவர்களின் பின்நவீனத்துவக்கூத்துகள் பற்றியும் விளக்கமாக எழுதலாம். சமைத்ததைச் சூடாக்கி, பிள்ளைக்குப் பாலையும் சீரியலையும் கொடுத்துவிட்டு, அவனின் காப்பகத்திலே விட்டுவிட்டு, கோடைவகுப்பெடுக்க ஓடவேண்டும். நேரம் முடியவில்லை.

Let me finish with one thing. I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise..... pure noise that can not be filtered from any signal - of course, if any.

Now go on; amplify your decibels

said...

Chella, do you know why I was dumped with the following blog that wants to damage "my IMAGE"?

http://wandererwaves.blogspot.com

Only because, thamizmaNam got in the mid of the personal abusive war between you + senthazhal Ravi Vs. Moorthy (+ you know who you blamed as his cohorts then).

Alas! Now we here the sermons of look-at-from-whom.

As a matter of fact, the recent kAmAkkathaikaL episode, I had nothing to do with, but I TOTALLY agree with the decision given the situation that was propmpted by what puthuvai bloggers said... Yes, thamizmaNam listens to what bloggers say resonabily with a responsibility, NOT acts with whatever its own memebers think about an indiviual blogger.

As I have said many times earlier, I don't care thamizmaNam much as it is just an aggregator. In a matter of time, its and many aggregaotrs' need will evaporate. Hence, here we do not run with the "Grip of power" business. Noone gets our bread and butter from thamizmanam,but unwanted troubles and bad names/images. Posts like these are the only gainers as this make the vistors to them.

said...

//தமிழ்மணத்தின் செயற்பாடுகள் பற்றி நான் / தமிழ்மணம் நிர்வாகிகள் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. //

நண்பர் ஒருவர் விளக்கியது போல் விவரிக்கவேண்டிய அவசியம் தட்டிகளுக்கு அனாவசியம் என்றுதான் நானும் சொல்கிறேன்.தட்டிகளை தட்டிகளாக மதித்தாலே போதும் மாற்றங்கள் வந்துவிடும்! மற்றபடி இந்தமாதிரி உங்கள் மண்டக்கணத்தை அடிக்கோடிட்டுகாட்ட வேண்டிய அவசியம் இனிமேல் தேவைப்படாது.

said...

மிகவும் சுலபமான யோசனை எல்லோருக்குமே:
1. தமிழ்மணம் பொறுப்பின்றி நிகழ்வாற்றுகிறதென்று எண்ணினால், சொல்லிப்பாருங்கள்.

2. அவர்களின் விளக்க நியாயத்துடன் உங்களால் ஒத்துப்போகமுடியவில்லையென்றால், விலகிப்போங்கள்

3. தமிழ்மணம் மட்டுமே ஒரு திரட்டியல்ல. சொல்லப்போனால், திரட்டியினைச் சார்ந்து மட்டும் ஒரு பதிவு இயங்கவேண்டியில்லை. உங்களின் சிறகு விரிக்கும் தூரம் வரை சுதந்திரம். எதற்குப் பிடிக்காத, போருந்தாத இடத்திலேயிருந்து மாயவேண்டும்?

4. தமிழ்மணத்திலேயிருப்பவர்களுக்கும் தனிப்பட நிம்மதி; பிடிக்காது போன பதிவர்களுக்கும் தனிப்பட நிம்மதி.

what's a big deal?!

said...

/மற்றபடி இந்தமாதிரி உங்கள் மண்டக்கணத்தை அடிக்கோடிட்டுகாட்ட வேண்டிய அவசியம் இனிமேல் தேவைப்படாது./

அதுவே என் கருத்தும். மண்டைக்கனம் என்பது உங்களுடையதாக எடுத்துக்கொள்கிறேன். மற்றவர்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்பது.... "information that we get won't be divulged; won't be given to anyone" என்ற அர்த்தத்திலே சொல்லப்பட்டது என்பதை உங்கள் கனமற்ற மண்டைவெளி அறிந்தால் மகிழ்ச்சி.

said...

//அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள். அது பற்றி எனக்கேதும் கிஞ்சித்தும் வருத்தமில்லை. ஏனென்றால், விலக்கவேண்டிய பதிவு என்றால், தமிழ்மணத்தின் முடிவே என் முடிவும். தமிழச்சியின் ஒரு பதிவு பற்றிய என் நிலைப்பாடு என்னவாகவிருந்தது என்பது பற்றித் தமிழ்மணத்தின் மற்றைய உறுப்பினர்கள் விளக்கம் தந்ததைக்கூட மண்டையிலே போட்டுக்கொள்ளும் நிதானம் உங்களிடமோ உங்கள் தோழர்களிடமோ இல்லை)//

இந்த உண்மையைத்தான் எதிர்பார்த்தேன். மூர்த்தியை செல்லா வசவுமாறி பொறிந்தபோது இல்லாத ஆவேசம் பெயரிலியை தனிப்பட்டமுறையில் தாக்கியெழுதும்பொழுது தமிழ்மணத்திற்கு ஏன் வந்தது. ஒரு வேளை நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்கமாட்டேன் என்பது மற்றுக்கருத்து நண்பர்களோடு இன்றும் நட்பு பாராட்டும் என் குணம் தெரிந்தவர்கள் அறிவார்கள். அது என்ன குழுவோ எழவோ? நாங்களெல்லாம் இணையக்குழுவையே முன்னப்பின்ன பார்த்திராதவர்கள் ஐயா. பிடிக்காவிட்டால் தூக்கியெறிய? உங்கள் ரகசிய குழுவை யார் மதிப்பார்கள். காசியாவது ஒரு விசயத்தை (ரேட்டிங் என்று ஞாபகம் ) எவ்வளவு விளக்கங்கள் கொடுத்து செய்வார் என்று மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். தடியெடுத்தவன் தண்டக்காரன் என்றெல்லாம் முடிவெடுக்கும் அதிகாரம் இந்த ஊடகத்தில் செல்லாது என்று எத்தனை முறைதால் டெசிபல் ஏற்றுவது ரமணீதரே! மற்றவர்களுக்கு (திரட்டிகளுக்கு) இல்லாத மட்டுறுத்தும் திமிர் உங்கள் திரட்டிக்கு மட்டும் வருகிறதே இது மண்டைக்கணத்தாலா இல்லை வந்துவிழும் பார்வை கண்விழிகளாலா?

said...

இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான்

said...

அது ரமணீதரன் அல்ல (என் பதிவுப்பெயரினைப் போன்ற ஒலிக்குழப்பத்திலே ஏற்படுத்தப்பட்டிருக்கும் காமக்கதைப்பதிவிலே இருப்பதுபோல]
இரமணிதரன் என்பதே சரி, whoever you are, unsettled woman. :-)

அட இனி உங்கள் களம்; அடித்து ஆடுங்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியாகிவிட்டது.

தமிழ்மணம் உங்களுக்குப் பொருந்தாவிட்டால், சேர்ந்த வகையிலேயே விலக்கும்படி கேட்டு ஓர் அஞ்சல் அனுப்புங்கள்; விலக்குவார்கள்; உங்களுக்கும் சிக்கலில்லை; தமிழ்மணத்துக்கும் சிக்கலில்லை. ஆனால், அப்படியாகச் செய்யாமல், உங்கள் பதிவிலே விலக்கு என்று இடுகை போடு சீன் காட்டாதீர்கள். இந்த சீன்களைக் கண்டு மிரண்டு ஓடிய காலம் ஓடிவிட்டது. you hooked it, now you have to unhook it too. period.

said...

// தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினையேனும் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்திருக்கின்றீர்களா? மற்றைய திரட்டிகளுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றீர்களே? தமிழ்மணத்திலேயிருப்பதானால், தமிழ்மணத்துக்கும் கொடுங்கள் என்று தமிழ்மணம் எப்போதாவது அடவடித்தனமேனும் பண்ணியேனுமிருக்கின்றதா? குறைந்த பட்சம் சேர்ந்திருக்கும் ஒரு திரட்டி, தாம் எடுத்த விதத்திலெல்லாம் எண்ணியபடி விமர்சிக்கப் பொறுத்திருக்கும் திரட்டி என்ற அளவிலேகூட தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கொடுக்கமுடியாத பதிவர்களெல்லாம் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் கொண்ட வலைவீரர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது சிரிக்கவும் முடியவில்லை; வருந்தவும் முடியவில்லை.//

ஹ ஹா.. திரட்டிதான் சர்வம் என்ற இருமாப்பின் வெளிப்பாடுதான் இந்த மொத்த வார்த்தைகளின் வெளிப்பாடு. அதாவது நான் சென்னையில் முதன்முதலாய் பதிவர் சந்திப்பு சென்றபோது சொன்ன முதல் விசயம்...”பாலா எழுதுபவர்கள் மட்டுமே படிக்கும் நிலை மாறி பலரும் படிக்கும் நிலை வர முதலில் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்றவற்றை ஒவ்வொறு இணைய மேய்வகங்களிலும் ஒட்டவேண்டும் என்று சொல்லி போஸ்டர் செய்வித்து ஒட்டியதோடல்லாமல் கோவையில் முதல்முறையாக வலைபதிவர்களை பூங்காக்களிலிருந்து பட்டறைக்கு இடம்பெயர்த்திட்ட செல்லாவின் உழைப்பையும் பாலபாரதியின் உழைப்பையும், மாசிவாவின் உழைப்பையும், நடத்திக்கொடுத்த எழுதாளர் நண்பர் பாமரனின் உழைப்பையும், உங்களைப்போட தட்டுக்கழுவினேன் தொட்டிலாட்டினேன் என்று பட்டியலிட்டு சொல்ல எனக்கு பிடிக்கவில்லை. முடிந்தால் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

said...

blogger,
why do you censure my comments while allowing others? Is allowing my comments harmful for your "benovalent" intention? ;-)

said...

மேலும் ஒரு பத்திரிக்கையில் கூட குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்ற குறைய அன்று ஹிந்து நாளிதலில் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி யூ ஆர் எல் ஓடு பத்திரிகை துறை நண்பர்கள் துணையோடு கோவையில் வெளியிடச்செய்து பல்லாயிரம் மக்கள் முன் பாஃர்வையிட வைத்ததை தாங்கள் தெரியாமல் இருக்கலாம், அறியாமல் இருக்கலாம். விட்டுவிடுங்கள் உங்களுக்கு ஆயிரம் வேளை வெட்டி இருக்கும்!

said...

இதற்கு மேலும் விளக்கங்கள் கொடுக்கவேண்டிய அவசியங்கள் எனக்கு இல்லை. ஆனால் தடுத்தல் மட்டுறுத்தல் போன்றவைகளை கொஞ்சம் இறுமாப்பின்றி செய்யும்படி தட்டியை தட்டவே இந்த ஆட்டம்! இனியாவது முகமிலிகளை உங்கள் மண்டைக்கணத்தாலும், பத்துபேர் ரகசியக்கூட்டங்களாலும் முடிவு செய்வதை முடக்குங்கள். சுருக்கமா சொல்லணும்னோ கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! அவ்வளவே. சசியுடன் நான்பேசியதை மரியாதை கருதி சொல்லவில்லை. இழுக்கவேண்டாம். அங்கும் இதே கருத்தை முன்வைத்தேன். எனைச்சேர்த்துக்க சொல்லி கெஞ்சியதாக உடான்ஸ் விட வேண்டாம். அபடியிருந்திருந்தால் நானே மறுபடியும் அவரிடம் சொன்னதுபோல் பார்மலாக மடல் அனுப்பியிருப்பேன். இன்றுவரை செய்யவில்லையே? ஏன்! ஹ ஹா. நீங்கள் இணையக்கத்துக்குட்டி! சொல்லிக்கொடுக்க நேரமில்லை. ஆனாலும் சொல்கிறேன் ஒரு விசயம். நீங்கள் பதிவுகளின் தலைப்பை மற்றும் கட்டுரையை மற்றும் பின்னூட்டத்தை மட்டுமே திரட்டுகிற்ரிர்கள். ஆனால் வலைப்பூக்கள் மாடுலர் ஸ்ட்ரக்சர் ஆகிவிட்டது இன்று. நானே சிறுதிரட்டி வைக்கமுடியும் என் பூவில். படம் கம்பிக்க முடியும். லிங்க் குடுக்க முடியும். எல்லாவற்றுக்கும் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு சூழலில் இவ்வளவு ஆர்ப்பாட்டமாக “காரணம் சொல்லத்தேவையில்லை”, ”வவுனியாக் காட்டு ரகசியக்கூட்டத்தில் எடுத்த முடிவு” என்று எல்லாம் பீலா விட்டு உடம்பைக்கெடுத்துக்கொள்ளவேண்டாம்!

அன்புடன்
தமிழரசி!

said...

என் பின்னூட்டங்களை விடாமல் உங்கள் பேச்சுக்காக மட்டுமே ஒரு பதிவு. இதற்குள்ளே திரட்டி மீது கருத்து விமர்சனம். வாழ்க கொற்றம் ;-)

said...

வணக்கம் நல்ல இடுகை . . . .

இந்தப்பதிவினைப்படித்தபின் எனக்குக்தோன்றிய மனதுக்குப் பட்ட சில விடையங்களைப்பகிர்கிறேன் எனக்குத்தோன்றியதுபோலவே பலருக்கும் தோன்றியிருக்கலாம் ! அவர்கள் இது பற்றி பின்னூட்டமிடாமலிருந்திருக்கலாம் ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து ! இக் கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை . . . .

* சில நேரங்களில் தனிமனித விரோதங்களை பரப்புவதற்காக வலைப்பூக்களைப்பயன்னடுத்திவிட்டு திரட்டிகளில் உலாவிடுகின்றனர்

* மற்றயது ஆபாச பதிவுகளை தவிர்த்து , மற்றவற்றை கட்டுப்படுத்த முடியாது, செய்ய சொல்லவும் கூடாது, இணையம் , வலைப்பதிவு இவை எல்லாம் கட்டற்ற சுதந்திரம் தருபவை.

* நல்லவை வேண்டும் என்றால் நாம் தான் தேடிப்பார்க்க வேண்டும் தொலைக்காட்சிகளில் விசித்திரமான விளம்பரம் வராமல் இருக்கா? அதைப்போல மொக்கை பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் , சில விளம்பரங்கள் கவர்வதை போல மொக்கை பதிவுகளும் எம்மை கவரச்செய்கின்றது . எனவே " சல்லடை நல்லவற்றை விட்டு விட்டு கெட்டவற்றை தன்னிடம் வைத்துக்கொள்ளும், அன்னம் பால் மட்டும் அருந்திவிட்டு தண்ணீரை விட்டு விடும். " என்பதற்க்கேற்ப நல்லதை நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் நல்லது வேண்டும் என்றால் அது நம் கையில் தான் உள்ளது அதற்கு திரட்டிகளை குற்றம் சொல்வது பயன் தராது !

* நாம் யார் என்பதை நாம்தான் தீர்மானிக்க முடியும்.

நன்றியுடன்
மாயா

said...

அடடா! unsettle woman என்பது 'ஓசை" செல்லாதானா?
மன்னித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் தமிழ்மணத்திலேஇல்லை என்ற எண்ணத்திலும் அவர் அனுப்பிய அஞ்சலைத்தான் போட்டிருக்கின்றீர்கள் என்றும் செல்லா unsettled man என்ற பாலின் குழப்பத்திலும் தவறாகப் பேசிவிட்டேன். என் இரைச்சலுக்கு மன்னிக்கவும். தெண்டனிடுகிறேன்

said...

நண்பர் பெயரிலி, ஒரு சிறுகுழப்பத்தின் காரணமாக அப்ரூவ் செய்வதற்குப்பதில் ரிஜெக்ட் ஆகிவிட்டது வேறு சில புண்ணூட்டங்களோடு! கவலை வேண்டும் அஜாக்ஸ் கேச் இருந்ததால் ஸ்க்ரீன் ஷாட் வைத்துள்ளேன். நாளை அவற்றை வெளியிடுகிறேன். காரணம் அந்த அருமையான ஆங்கில பின்னூட்டம். ஆம் 5000 பதிவர்கள் எழுதினாலே இன்றிருக்கும் திரட்டிகள் திணறும்பொழுது ஐம்பதினாயிரம் பேர் எழுதினால் திரட்டிகளின் தேவை நிச்சயம் மறையும்! சரியான கருத்தான ஆள்தான் போல இருக்கு. வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி ! என்னைப்போலவே!

said...

//Posts like these are the only gainers as this make the vistors to them.//

ha ha.. oh all the comments were there above! fine. now you know me for quite sometime. I dont need to drag tamilmanam to get hits, Whatever i write will get some hits even if it is not in my name! see this blog's posts! ha ha! you bet you can beat in it! no need also! Do something usefull! lol!

said...

நான் மீண்டும் சொல்லவிரும்புவது ஒன்றே ஒன்றுதான். தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளும் மணம் வீசட்டும்! மற்றவை வெட்டி விவாதங்கள் தான்! பழங்கதைகள்தான்! மாற்றங்கள் நிகழும் காலங்கள் நெருங்கிவரும் சூழலில்!

இத்துடன் இந்த அவதாரம் முற்றியது!

Anonymous said...

அண்செட்டில்டு உமன் என்பது யார் ? ஓசை செல்லாவா ?

இல்லை என்றால் எப்படி பின்னூட்டம் எல்லாம் அந்த பெயரில் வருகிறது ?

ஓசை செல்லாவுக்கு:

பெயரிலியின் நேரத்தை வீணாக்க வேண்டாம்...அவருக்கு நெறைய வேலை இருக்குன்னு நெனைக்கிறேன்...

உங்கள் கருத்துக்கள் நன்றாகவே இருக்கின்றன...அதனால் தான் இது நீங்க எய்துனதா இல்லையான்னு ஒரே டவுட்டு ஹி ஹி...

உங்களுக்கு ஒரு புல் பாட்டில் ஒயின் ஏற்பாடு செய்கிறேன்...வாருங்கள் ரூம் போட்டு யோசிக்கலாம்...


பெயரிலிக்கு:

பேக் டு பார்ம், நீங்க உங்க வேலைகளில் காண்சண்ட்ரேஷன் செய்வது நல்லது...

ஏன் வேலைக்கு ஆள் ஏதும் கிடைக்காதா நீங்க இருக்க ஏரியாவுல ?

திரட்டிகளுக்கு கொடுத்து வைத்திருந்த லிங்க் டெம்ப்ளேட் மாற்றும்போது காணாமே பூட்ச்சு..,

இனிமேதான் எல்லா லிங்கையும் மறுபடி எடுத்து போடனும்...

Anonymous said...

தனிப்பட்ட முறையில் பல சக பதிவர்களை கன்னா பின்னாவென்று தாக்கிய போது இவருகளுக்கு கோபம் வரவில்லை. அதே போல ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி கன்னாபின்னாவென்று வசை மாறி எழுதும் பதிவுகள் வரும் போது இவர்களுக்கு கோபம் வரவில்லை.

ஆனால் வெட்டிக் கூட்டத்தில் ஒருவரை அவர் செய்த தவறினை தட்டிக் கேட்டால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

மாயவரத்தான் என்ற பதிவரை நியாபகம் இருக்கிறதா? அவர் இவர்களோடு போலி விவகாரத்தில் கோபித்துக் கொண்டு தானாகவே விலகிச் சென்றார். சமீபத்தில் மீண்டும் பதிவெழுத வந்த போது நான் அவரது வலைப்பூவை தமிழ் மணத்தில் இணைக்க இரண்டு முறை விண்ணப்பிட்த்தேன். ஆனால் இவர்கள் காரணம் எதுவும் சொல்லாமல் அதை நிராகரித்து விட்டார்கள். என்னங்கடா காரணம் என்று அவர் கேட்டதற்கு விளக்கம் தரவில்லை.

காரணம் என்ன தெரியுமா? தமிழ் சசியின் மற்றொரு முகத்தை முன்னர் தோலிருத்துக் காட்டியது மாயவரத்தான் தான். அதான் இந்தக் கோபம்.

அது சரி, தமிழ்மணத்தை என்னவோ இவர்கள் பெரிதாக்கியதாக்கி விட்டதாக்க உளறுகிறார்களே. டேய், அது பல தமிழ் வலைப்பதிவர்களின் முயற்சியால் பிரபலமானது.

ஓசை செல்லாவினால் தமிழ்மணத்துக்கு எத்தனை பேர் வந்திருப்பார்கள்?

இன்றைக்கு தமிழ்மணத்தில் ஓட்டிக் காட்டும் ஆட் சென்ஸ் போன்ற விளம்பரங்களின் வருவாயை பங்கு பிரித்துக் கொள்ள கூட்டம் சேர்ந்துள்ளீற்களே? தமிழ்மணத்தின் வெற்றியின் பின்னால் நீங்கள் யாரும் இல்லை. இப்போது எதிராக தோன்றுபவர்கள் மட்டுமே தான் இருக்கிறார்கள்.

தில் இருந்தால் தமிழ்மணத்தை அப்படியே விட்டு விட்டு ஆரம்பத்திலிருந்து ஒரு திரட்டியை உருவாக்குங்கடா பார்ப்போம்.

Anonymous said...

அன் செட்டில்டு உமனோடு செட்டில் ஆகும் ஆசையில் ஜொள்ளியவர்களின் மீசையில் மண்..

கோயம்புத்தூர் குசும்பு ? !!!!

said...

/Chella, do you know why I was dumped with the following blog that wants to damage "my IMAGE"?

http://wandererwaves.blogspot.com/

என் பழக்கதோஷம்:-(
read it as it is, how our benovalent friend created after his debuckle:

http://wandererwave.blogspot.com/

The reason I (and many others in thamizmaNam) have to endure such crap and nonsense only because we are -unfortunately- in the arena.

Let thamizmNam die down or kill or suicide. Things will be alright, and thousands flowers will bloom.... and more than anything, NEITHER upper bar NOR lower bar presents for anyone's freedom of speech - especically for those who censured others' comments for sake of portraying themselves as the defenders of whatever.

* Was anytime, thamizmaNam discredited anyone or hid someone's support under the monitor screen? If so, please let it know here rather than plaing blaming game in the mist.

Give me a simple reason why should I, an individual get all the beatings for what I (or other people who endured the situation like me) have nothing to do with as an individual. Is it beacuase I am a convenient target? Or, is it beacause, that I had not maintain phone and e-mail friendly relationships with you all? Or is it beacause, I am not an unsettled woman? Or is it beacause, I do not sit and post on my personal revolutionary and postmodernist adventures and endevors to make an image with aura among the "clans"?

I live my life; if you think if any of my work purposely hit you hard within the domain we share, let me know. I leave if I have to; else, you leave, if you want to. Otherwise, keep your nose in your space, and I keep mine in mine. Don't pick on me only beacause I am an easy target -an outsider, whom you have no need to respect and concern- for you.

I even do not attempt to peep on how the preachers live their own lives.

said...

பெயரிலி விட்டுவிடுங்கள். பழங்கதைகளும் வயதுக்கு வரும் முடிவிசயங்களும் வேண்டாம். நான் பதிவர்களுக்கு சொல்லிய விசயம் இங்கே மறுபடியும். எங்கும் தமிழ்மணத்தை நோகவில்லை. படித்துப்பாருங்கள்...

//சுயசிந்தனை, தன்மானம், தமிழார்வம் உள்ள பதிவர்கள் இந்த மாதிரியான மேட்டிமைத்தன்மை வாய்ந்த ஒரே ஒரு திரட்டியை இனியும் வளர்ப்பது என்பது ஒரு மோனோபொலி பிற்போக்கு செயாலாகவே முடியும் என்பதை ”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம். எனவே பதிவர்களும் வாசகர்களும் தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளையும் ஆதரிக்கவேண்டிய சூழலை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பதிவரும் தங்கள் வலைப்பூவில் தமிழ்மணத்தோடு, தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்க்கணிமை, தமிழ்ப்பதிவுகள், திரட்டி என்ற பல திரட்டிகளுக்கும் தொடுப்புக்கொடுப்பதோடின்றி மற்ற திரட்டிகளையும் தினமும் ஒரு முறையாவது பார்வையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த திரட்டிகளுக்கும் சில நூறு ஹிட்கள் வரும்பொழுது அவர்களும் புதிய யுத்திகளை புகுத்த முயல்வார்கள். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜிக்கு/புதுக்கண்டுபிடிப்புகளுக்கு எப்படி சுமையாகிப் போனதோ அதேபோல தமிழ் இணைய வலைப்பூ ஊடகத்திற்கு தமிழ்மணம் சுமையாக வாய்ப்புள்ளது. இப்படிச் செய்தால் ஒரு மோனோபொலி அல்லது தனித்திரட்டி சர்வாதிகாரம் இனிமேலும் வளர வாய்ப்பில்லாமல் தமிழ் மாற்றுச் சிந்தனைகளும் எழுத்துக்களும் வாழ்வாங்கு வாழும் என்று கூறி எனது இந்த முழுநீள கட்டுரையை பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வெல்க தமிழர்களின் மாற்றுச்சிந்தனைத்தளம். வாழ்க இணையத்தமிழ் சூழல்.

அன்புடன்
ஓசை செல்லா//

எனவே விரலை நட்டவைத்து என் குண்டியில் சொருகுவது போல் புகைப்படப் பதிவெல்லாம் போட்டுவிடாதீர்கள். (அப்புறம் ஏன் என்னை மட்டும் தாக்குகிறாய் என்றெல்லம் கேட்டால் எனக்கு பதி தெரியாதல்லவா!) அது முன்னும் அல்ல பின்னும் அல்ல. என்னைப்போலவே இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு நாற்றமெடுக்கும் துளை!

said...

நான் போஸ்ட்மாடர்னிசத்தை தாங்கிப்பிடிப்பவன் போல் இருக்குதே பெயரிலியின் தொணி! அடப்பாருங்கப்பா ஜோக்கை! நண்பர் பெயரிலிக்கு ஒரு சுக்குகாப்பி கொடுங்கப்பா!

Anonymous said...

சரி சரி, தமிழ்மண பேனரை ரெடி பண்ணுங்கப்பா. அல்லாரும் வலைப்பூவிலே போட்டுக்கோணும்.

இன்னும் ரொம்பப்பேரு வலைப்பூவில் அந்த பழைய 'ஆதரிக்கிறோம்' பேனரே பல்லிளிச்சுக்கிட்டு நிக்குது!

Anonymous said...

ஊர் வம்பிற்க்கு உலகநாயகனின் பெயரை ஊறுகாய்யாக்கிய மூத்த பதிவர் ஓசை செல்லா அண்ணனின் மூஞ்சி நாறும் வரை அன்டார்டிகா பனிகரடியின் சாணியை இன்போர்ட் செய்து அடிப்போம் என சோகத்துடன் எச்சரிக்கிறேன்!

சோகன் நொந்தசாமி
ஒன்லி தலைவன் & ஒன்லி தொண்டன்
உலகநாயகன் சரக்கடி மன்றம்
நீயூ ஜெர்சி.

Anonymous said...

தெய்வமே எங்கேயோ போய்டீங்க!


உங்க தில்லு எவனுக்கு இருக்கு? எங்களுக்காக குரல் கொடுக்க வந்த உங்களுக்காக ஓரு மேட்டருங்க!



சில மணி நேரத்திற்கு முன்பு தமிழ்மணத்துல பெயரிலி பதிவு பாத்தேனுங்க.. இப்ப காணாமப்போச்சி.


அப்புறம் நம்ப பதிவர் ரவி சங்கர் பெயரிலி உங்கள் பதிவில் கழிந்து வைத்திருப்பதை குறித்து ஒரு பதிவு போட்டார். அதில் காசி பெயரிலி கூட பின்னூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. அந்த பதிவும் திடீர்னு காணாம பூச்சி. சர்தான் நாம ரவிசங்கள் வலைபூவில் போய் பார்ப்போம் என்று வந்தால் அவருடைய தளத்தில் அந்த பதிவையும் அதற்கு முன்பு தமிழ்மணம் குறித்து போட்ட மூன்று பதிவுகளும் அழிக்கப்பட்டிருக்கு! ஏனுங்கண்ணா இப்படியெல்லாம் செய்றாங்க.. எனக்கு இவர்கள் செய்யும் கூத்தைக் கண்டால் வெறுத்தே போகிறது.



எனக்கெல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். மனசு நிம்மதிக்காகவும் என் சந்தோஷத்துக்காகவும் 1 மணிநேரம் காசு கொடுத்து பதிவு எழுதிப்போடுகிறோம். இப்படியெல்லாம் மானங்கெட்டு இருக்க வேண்டுமா என்று நெனைக்கத் தோனுதுங்கண்ணா

Anonymous said...

//ஒரு தமிழ்மணம் போல் இன்னொரு தேன்கூடு வரலாம், திரட்டலாம், ஆனால் ஒரு சுகுணாவையோ, செல்லாவையோ, வளர்மதியையோ பிரதியெடுப்பது சாத்தியமா என்பதை மரியாதையின்றி மட்டுறித்தி.. முன்னெச்சரிக்கை.. சீ எழுதவே அசிங்கமாக இருக்கிறது.. முன் தகவல் இன்றி இந்த படைப்பாளிகளை அலட்சியப்படுத்த நினைக்கும் தமிழ்மணப் படிப்பாளிகள் உணரவேண்டும்.//

Fantastic stuff pal. These bunch of pompous phd's should know the sensibilities of a poet, writer who writes here. These genre of ppl are known for their egoistic tendencies cause they do what is close to their heart. After all these bunch of learned jokers live on these creative hundred's FEEDS but act with least care to to sensibilities of writers, as the Central Assassination Committee of Thamizhmanam!

Many feared to write in the Tamilblog because this dominant aggrigator is the only source of window to the tamil blog readers. So the natural initial humbleness and charm of Kasi is lost. (I remember how he sent me an educative mail to me to add Pathivuppattai and also to add umar's thenee font. That one man had time and such a lot of effort to manage those day's 1000 active bloggers but these bunch of Nasa to Tamilwebdom people dont have time to talk to writers who spend every day a few hours for the tamil blog world.

Hats off to you for giving this carefully worded document with boldness and swiftness. From today I will visit other aggrigators to click and read the blog posts but will visit Tamilmanam to only see what is up there in the tamil blogging world!!!!!

Cheers and best wishes for your efforts. Take care.

D.R

Anonymous said...

//”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம்.//

Yeah, you are right maan. many titles were like this in the recent days. Fear of Ban? Shit.

said...

செல்லா,

நலமா ?

எல்லாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க.

said...

என் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதாலும் இதை எழுதுபவர் ஓசை செல்லா என்று வெளிக்காட்டப்பட்டுப்பதாலும் சில வார்த்தைகள்:

செல்லா சொல்லியிருப்பதில் பல உண்மைக்குப் புறம்பானவை. பெயரிலி சொல்லியிருப்பவை நான் அறிந்தவரையில் பெரும்பாலும் உண்மை. செல்லா தன் தனிப்பட்ட சன்டைக்கு தீர்வு காண வேறுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். தேவையில்லாமல் வலைப்பதிவர்களைக் குழ்ப்புவதைக் கண்டிக்கிறேன்.

said...

Dear Mr Kasi, Will write a post latter!thanks for the comments!

said...

//அன் செட்டில்டு உமனோடு செட்டில் ஆகும் ஆசையில் ஜொள்ளியவர்களின் மீசையில் மண்..

கோயம்புத்தூர் குசும்பு ? !!!!

//

;)

said...

////தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி, அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற பதிவர்களின் மாற்று எழுத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மழலையர் திரட்டி போல “குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்றெல்லாம் சொத்தைவாதங்களை வைத்துக்கொண்டு பலரும் கூப்பாடு போடும் வேளையில் படைப்பாளியை சிறுதும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கும் மேட்டிமைத்தனம் சுகுணா திவாகர் போன்ற ஒரு சில படைப்பாளிகளை எவ்வளவு எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது என்று பார்க்கவேண்டும். ////

அடேங்கப்பா! சர்வாதிகாரத்துக்கு எதிரா வாயை கிழித்துக்கொள்பவர்கள் கூட எல்லா பின்னூட்டங்களையும் ரிலீஸ் பன்னுவதில்லையே ஏன் செல்லா?

ஆமா நீங்க எல்லா பின்னூட்டத்தையும் ரிலீஸ் பண்ணிட்டிங்க தான? எதுக்கும் ஸ்பேம் -ல ஏதாவது இருக்கப்போவுது, ஒரு வாட்டி செக் பண்ணிடுங்க!

said...

செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு:

தமிழ்மணத்தின் மீது தேவையின் பேரிலோ, தேவையில்லாமலோ யாருக்காவது கோபம் ஏற்படும்போதெல்லாம் பெயரிலி பலி கடாவாக ஆக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. மீண்டும், மீண்டும் கத்தி அவர் கத்தில் விழுந்து அவருடைய தலை உருட்டப்படுவது தமிழ்மணத்தோடு தொடர்புடைய எனக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் தனிப்பட்ட முறையில் இந்த விளக்கத்தை அளிக்கத் தோன்றியது. இதுவாவது காரண, காரியமின்றி அவருடைய தலையைக் கொய்ய அலைபவர்களைச் சிறிது சிந்திக்க வைக்குமா என்று பார்ப்போம்.

முதலில் தமிழ்மணம் குழுவிற்கு இருக்கும் அரசியல், வணிக நோக்கங்கள் பற்றியும், அக்குழுவை ஆட்டிப்படைப்பது பெயரிலி என்ற ஒற்றை ஆள் அல்லது அவரைப் போன்ற ஓரிருவர் என்பது போன்றதான புனைவுகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பிரச்சினை தீவிரம் அடையும் சமயங்களில் வேதனையையும், விரக்தியையும் அளிக்கிறது.

தமிழ்மணத்தில் பதிவுகள், இடுகைகள் நீக்கங்கள் தொடர்பான முடிவுகள் எதுவும் எந்த ஒரு தனி ஆளாலும் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்று நான் சொன்னால் அதை நம்புவதும், நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் அது உண்மையல்ல என்பதே யதார்த்தம்.

தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே. பயனர்களிடமிருந்து வந்த புகார்களை விவாதத்திற்குட்படுத்தி முடிவு செய்வதற்கான குழுவில் நானும் இருப்பதால் இதை என்னால் சத்தியம் செய்து கூற முடியும் (அதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் இனி என் தலையும் சேர்த்து உருட்டலாம்). நிலைமை இப்படி கூட்டு விவாதம், கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்றவாறு இருக்கையில், தமிழ்மணத்தை ஆட்டுவிப்பது பெயரிலி என்ற தனி ஆள் என்ற பரவலான கருத்தும், பெயரிலியை ஆட்டுவிப்பது ஒரு "இயக்கம்" (அது என்ன எழவாக இருந்தாலும்) என்ற தமிழச்சியின் கண்டுபிடிப்பும் கேலிக்கூத்து. தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

தமிழ்மணத்தின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் இவற்றை ஒட்டியே அமைந்தவை. எந்த ஒரு இயக்கத்திற்கும், அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அப்படி வெளிச் சக்திகள் எங்களை ஆட்டிப்படைக்கும் என்றால் அதில் நானோ, பெயரிலியோ, மற்ற நண்பர்களோ இருந்திருக்க மாட்டார்கள். இந்த அமைப்பு எப்போதோ காணாமல் போயிருக்கும். எல்லோரையும் போலவே, தமிழ்மணத்தோடு தொடர்புடைய நண்பர்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரே நிலைப்பாடு தான், அது தான் தமிழ்மணத்தை இயக்குகிறது என்று சிலர் நினைப்பது 'மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்' போன்ற கதை தான்.

பலருக்கு உள்ளது போலவே தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இருக்கும் முழுநேரத் தொழில், குடும்பம், வாழ்விட சூழல்கள் சார்ந்த அன்றாட பிரச்சினைகளைத் தாண்டி, செலவிட கொஞ்ச நேரமும், தமிழ் மொழி, சமூகத்தின் மீதான ஆர்வக்கோளாறும் மட்டுமே தமிழ்மணத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தை வைத்து பெரிய அரசியல் லட்சியத்தை அடையவோ, மில்லியனர்களாக ஆகும் எண்ணமோ, கலாச்சாரப் போலிஸ் ஆகும் ஆசையோ, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் குரூர மனமோ அல்லது வேறு சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ இல்லை. இது எனக்கும் பொருந்தும். பெயரிலிக்கும் பொருந்தும். பிற நண்பர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, வலைப்பதிவு மகானுபவர்களே, பாவம் பெயரிலியை இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

தனிப்பட்ட அளவில், பெயரிலிக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற தெருச்சண்டைகளில் இறங்காமல், உங்கள் படைப்பூக்கத்தை ஆக்கப்பூர்வமான திசையை நோக்கிச் செலுத்துங்கள். இந்தச் சகதியில் இறங்கி மல்லு கட்டுவதை விட தமிழிலக்கியத்திற்கு உங்களால் சிறப்பாக பங்களிக்க முடியும். இதைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்கள் ஆர்வமின்மையும், அலட்சியப்போக்கும் நான் அறிந்தது தான். குறைந்தபட்சம் இந்த நேரத்தை நித்திலனுடன் செலவிட்டால் அவனுடைய எதிர்காலமாவது சிறக்கும்.

said...

//தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே//

பெயரிலி, செல்லா, காசி மற்றும் இன்ன பிற பின்னூட்டக்காரர்களுக்கு,

தெரிஞ்சோ தெரியாமலோ(?) என்னோட பேரை இதுல இழுத்து விட்டுட்டீங்க. என் பெயர் வந்ததுக்கு காரணம் தமிழ்மணத்தை (மட்டும்) உபயோகப்படுத்திக்கிட்டு அதேநேரம் தமிழ்மணத்தையே கிண்டல் அடிக்கிறான் என்பதாக இருந்தால் உங்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான், எந்த விசயத்தையும் நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன், அதுதான் என் நிகழ்கால மன அழுத்தங்களிடமிருந்து (அலுவலக மற்றும் வெளியில்) என்னை விடுவிக்கின்றன. எனக்கு எல்லாமே நகைச்சுவைதான், உயிர் போவதாக இருந்தால் கூட, போவது என் உயிராய் இருந்தால் மட்டும்.

அல்லது, என் பெயர் வெறுமனே எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டிருந்தால், செய்யுங்கப்பு... உங்களை நம்பிதான் நாங்கல்லாம் இருக்கோம். என்னை கட்டம் கட்டிடாதீங்க,,, அப்புறம் சோத்துக்கே சிங்கி அடிக்கவேண்டியிருக்கும்...

said...

/இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான்/

பெயரிலி, இது அபாண்டமான அவதூறு. அப்படியொரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை. கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொன்ன சில பின்னூட்டங்களை வெளியிட்டே உள்ளேன்.

பெயரிலி சொல்லியிருப்பது அப்பட்டமான பொய் எனச் சொல்லவே இப்பின்னூட்டம்.

I request Peyarili to take back his allegations. அதுதான் குறைந்தபட்ச நேர்மை!

said...

//இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).//

இந்த சுந்தரமூர்த்தி யார் என்று எனக்கு தெரியாது. அவர் ஒருவேளை மேலே குறிபிட்ட 3 தலைவர்களில் ஒருவர் ஆளும் நாட்டை சேர்ந்த குடிமகனாக இருந்தால், அவர் சொல்லி இருப்பது அப்பட்டமான லூசுத் தனம்.

ஒரு வேளை நீங்கள் இந்திய பிரஜையாக இருகும் பட்சத்தில் மன்மோகன் சிங்கின் ஆணையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் தோன்றித் தனமாக செயல்பட்டு விடுவீர்களா?

அவர் ஒன்றும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் ஆணையிட முடியாது. இந்திய நாட்டின் பிரதமராக சட்டத்திற்கு உட்பட்டு அவர் இடும் ஆணையை இந்திய பிரஜை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இதை வைத்து உங்கள் மீது வழக்கு தொடுக்க முடியும் என்பது தெரியுமா நண்பரே.

செல்லா மீது இருக்கும் கோபத்தின் தன் நிலை மறந்து பேச வேண்டாம்.

said...

//அல்லது, என் பெயர் வெறுமனே எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டிருந்தால், செய்யுங்கப்பு... உங்களை நம்பிதான் நாங்கல்லாம் இருக்கோம். என்னை கட்டம் கட்டிடாதீங்க,,, அப்புறம் சோத்துக்கே சிங்கி அடிக்கவேண்டியிருக்கும்..//

:))

அது சரி!

said...

என்ன நடக்குது இங்கே?

said...

இங்க கருத்து சொல்ல அனானியா ஏன் வரணும்?

நிஜப் பேர்லயே வரேன்!

Anonymous said...

மு. சுந்தரமூர்த்தி said...
செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு:

தமிழ்மணத்தின் மீது தேவையின் பேரிலோ, தேவையில்லாமலோ யாருக்காவது கோபம் ஏற்படும்போதெல்லாம் பெயரிலி பலி கடாவாக ஆக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. மீண்டும், மீண்டும் கத்தி அவர் கத்தில் விழுந்து அவருடைய தலை உருட்டப்படுவது தமிழ்மணத்தோடு தொடர்புடைய எனக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் தனிப்பட்ட முறையில் இந்த விளக்கத்தை அளிக்கத் தோன்றியது. இதுவாவது காரண, காரியமின்றி அவருடைய தலையைக் கொய்ய அலைபவர்களைச் சிறிது சிந்திக்க வைக்குமா என்று பார்ப்போம்.

முதலில் தமிழ்மணம் குழுவிற்கு இருக்கும் அரசியல், வணிக நோக்கங்கள் பற்றியும், அக்குழுவை ஆட்டிப்படைப்பது பெயரிலி என்ற ஒற்றை ஆள் அல்லது அவரைப் போன்ற ஓரிருவர் என்பது போன்றதான புனைவுகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பிரச்சினை தீவிரம் அடையும் சமயங்களில் வேதனையையும், விரக்தியையும் அளிக்கிறது.

தமிழ்மணத்தில் பதிவுகள், இடுகைகள் நீக்கங்கள் தொடர்பான முடிவுகள் எதுவும் எந்த ஒரு தனி ஆளாலும் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்று நான் சொன்னால் அதை நம்புவதும், நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் அது உண்மையல்ல என்பதே யதார்த்தம்.

தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே. பயனர்களிடமிருந்து வந்த புகார்களை விவாதத்திற்குட்படுத்தி முடிவு செய்வதற்கான குழுவில் நானும் இருப்பதால் இதை என்னால் சத்தியம் செய்து கூற முடியும் (அதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் இனி என் தலையும் சேர்த்து உருட்டலாம்). நிலைமை இப்படி கூட்டு விவாதம், கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்றவாறு இருக்கையில், தமிழ்மணத்தை ஆட்டுவிப்பது பெயரிலி என்ற தனி ஆள் என்ற பரவலான கருத்தும், பெயரிலியை ஆட்டுவிப்பது ஒரு "இயக்கம்" (அது என்ன எழவாக இருந்தாலும்) என்ற தமிழச்சியின் கண்டுபிடிப்பும் கேலிக்கூத்து. தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

தமிழ்மணத்தின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் இவற்றை ஒட்டியே அமைந்தவை. எந்த ஒரு இயக்கத்திற்கும், அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அப்படி வெளிச் சக்திகள் எங்களை ஆட்டிப்படைக்கும் என்றால் அதில் நானோ, பெயரிலியோ, மற்ற நண்பர்களோ இருந்திருக்க மாட்டார்கள். இந்த அமைப்பு எப்போதோ காணாமல் போயிருக்கும். எல்லோரையும் போலவே, தமிழ்மணத்தோடு தொடர்புடைய நண்பர்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரே நிலைப்பாடு தான், அது தான் தமிழ்மணத்தை இயக்குகிறது என்று சிலர் நினைப்பது 'மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்' போன்ற கதை தான்.

பலருக்கு உள்ளது போலவே தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இருக்கும் முழுநேரத் தொழில், குடும்பம், வாழ்விட சூழல்கள் சார்ந்த அன்றாட பிரச்சினைகளைத் தாண்டி, செலவிட கொஞ்ச நேரமும், தமிழ் மொழி, சமூகத்தின் மீதான ஆர்வக்கோளாறும் மட்டுமே தமிழ்மணத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தை வைத்து பெரிய அரசியல் லட்சியத்தை அடையவோ, மில்லியனர்களாக ஆகும் எண்ணமோ, கலாச்சாரப் போலிஸ் ஆகும் ஆசையோ, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் குரூர மனமோ அல்லது வேறு சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ இல்லை. இது எனக்கும் பொருந்தும். பெயரிலிக்கும் பொருந்தும். பிற நண்பர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, வலைப்பதிவு மகானுபவர்களே, பாவம் பெயரிலியை இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

தனிப்பட்ட அளவில், பெயரிலிக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற தெருச்சண்டைகளில் இறங்காமல், உங்கள் படைப்பூக்கத்தை ஆக்கப்பூர்வமான திசையை நோக்கிச் செலுத்துங்கள். இந்தச் சகதியில் இறங்கி மல்லு கட்டுவதை விட தமிழிலக்கியத்திற்கு உங்களால் சிறப்பாக பங்களிக்க முடியும். இதைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்கள் ஆர்வமின்மையும், அலட்சியப்போக்கும் நான் அறிந்தது தான். குறைந்தபட்சம் இந்த நேரத்தை நித்திலனுடன் செலவிட்டால் அவனுடைய எதிர்காலமாவது சிறக்கும்.

//////////////////////////







அட ராமா!


தமிழ்மண நிர்வாகிகளில இவ்வளவு வெவரமானவங்களா? எங்க போயி முட்டிக்க.... பாலக்காட்டு மாமா ரேஞ்சில....

said...

//செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு://

இதிலே லக்கிலுக்கு எங்கிருந்து வந்தான்? :-)

லக்கிலுக்குவின் டவுசர் கிழிந்திருக்கா இல்லையா என்று இன்றும் சோதித்துக் கொண்டிருப்பவர் பெயரிலி அண்ணை தான். பெயரிலி அண்ணை எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று போய்க்கொண்டிருக்கிறேன்! :-)

தேவையில்லாமல் என் பெயரை தமிழ்மணத்தின் நிர்வாகியாக இருக்கும் ஒருவர் இங்கு இழுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

said...

சஞ்சய் காந்தி ஐயா,
உணர்ச்சிவசப்படாதிங்க! இது "இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா" என்று டி.கே. பரூவா திருவாய் மலர்ந்த எமெர்ஜென்சி காலம் இல்லீங்கோ.

நீங்க சொல்றது போல "சட்டத்திற்கு உட்பட்டு" ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில் பிரதமர் மஹாராஜா மாதிரி சாதாரண பிரஜைக்கு ஆணையிட முடியாதுங்கோ. அதுக்கு நீதிமன்றம்னு ஒன்னு இருக்குதுங்கோ.

Anonymous said...

//நீங்க சொல்றது போல "சட்டத்திற்கு உட்பட்டு" ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில் பிரதமர் மஹாராஜா மாதிரி சாதாரண பிரஜைக்கு ஆணையிட முடியாதுங்கோ. அதுக்கு நீதிமன்றம்னு ஒன்னு இருக்குதுங்கோ.//

அறிவாளி மூவன்னா சூணா,

தமிழ்மணம் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தால் நடத்தப்படுவது என்று இவ்வளவு நாளாக கதைத்து விட்டு இப்போதைக்கு திடீரென சாதாரண பிரஜை என்று ஜகா வாங்கிட்டீங்களே.

சட்டப்படி ரிஜிஸ்தர் செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தால் பிரதமர், மதல்வர் போன்றோர் கூட ஒரு சாதாரண அவசர சட்டம் மூலம் கூட ஆணை பிறப்பிக்க முடியும்.

எதுவும் தெரியலைண்ணா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பீலா விட்டதெல்லாம் அந்தக் காலம். இனிமே பப்பு வேகாதுடீ.

Anonymous said...

இதிலே செம்ம ஜோக் என்னண்னா அந்த தமிழ்கூமுட்டை நிர்வாகிகளில்(?!) ஒருத்தர் நானும் இதிலே இருக்கேன் என்னையும் ஆட்டத்திலே சேத்து திட்டுங்க. நீங்க ஒரு சிலரை மட்டும் திட்டுரதால என்னோட பேரு வெளில தெரிய மாட்டேஙுது அப்படீன்னு 'செல்'லமா கோச்சுக்குறாரு.

said...

என்ன நடக்கப்போகிறது...

ஓசை செல்லாவுக்கும் பெயரிலிக்கும் இடையில சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும்...

ஆமா மத்தியஸ்தம் வகிக்க யார் வருவது